சுங்கசாவடிகளில் வாக்குவாதம் வேண்டாம்- காவல்துறை
சுங்கசாவடிகளில் தேவையற்ற வீண் வாதங்கள் செய்ய வேண்டாம் என வாகனஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சுங்க சாவடிகளில் மிண்ணணு கட்டணம் செலுத்தும் முறையினை( FasTag ) பலகட்ட நிகழ்வுகளுக்கு பின் அனைத்து சுங்க சாவடிகளிலும் அமல்படுத்தியுள்ளது.பாஸ்டேக் முறையில் செலுத்த முடியாதவர்கள் இரட்டிப்பு கட்டணம் கட்டவேண்டும் என கடும் நிபந்தனையுடன் துவங்கிய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இது குறித்து பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதனைத்தவிர்க்கும் வகையில் சுங்க சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
அரசு விதிகளுக்கு உட்பட்டு சுங்க சாவடிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து இனிய பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வண்ணம் செயல்பட காவல்துறையினர் சில வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.சுங்கச்சாவடிகளில் சில வாக்குவாதங்கள் தவிர 90 சதவீத வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.