அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: கள்ளக்குறிச்சி கலெக்டர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அனைத்து கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி மாவட்டத்திலுள்ள 45 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு முகாம்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் வாயிலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது 01.09 .2021 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் தவணை 3,77,429 இரண்டாம் தவணை 69,354 என மொத்தம் இதுவரை 4,46,783 தவணை செலுத்த பட்டுள்ளன. மாவட்டங்களில் தகுதியுள்ள அனைநத்து நபர்களும் விரைவில் முழுமையாக 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கோவிட்ஷில்டு 9,980யும் கோவக்சின் 4,400யும் போதிய தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் இதுவரை தடுப்பூசி செலுத்த கொள்ளாதவர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.