Begin typing your search above and press return to search.
மாநில கராத்தே போட்டி: கள்ளக்குறிச்சி ஜே.எஸ் பள்ளி மாணவர் வெற்றி
மாநில கராத்தே போட்டியில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் வெற்றி பெற்றார்.
HIGHLIGHTS
சேலம் ஜே.எம்.ஜே., கிராண்ட் ஹாலில், 8 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான கராத்தே போட்டி, கடந்த 14ம் தேதி நடந்தது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 248 பேர் பங்கேற்றனர்.
இதில் 9 -10 வயது மாணவர்களுக்கான பிரிவில், கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 4ம் வகுப்பு பயிலும் மாணவர் பழனியரசன் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் சென்னையில் நடைபெறும் அடுத்த கட்ட, மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.
இதையொட்டி ஜே.எஸ். பள்ளி நிறுவனர் செந்தில்குமார், தாளாளர் ஜனனிசெந்தில்குமார், தலைமை ஆசிரியர் ஜெயலஷ்மி, கராத்தே பயிற்றுநர் குமரேசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர் பழனியரசனை பாராட்டி சான்றிதழ், கோப்பை வழங்கினர்.