Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சியில் வரும் 29ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29 ம் தேதி காலை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் வேளாண்மை உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்களை நேரடியாக அளித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.