உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவியிடங்களுக்கு சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மையங்களில் வாக்குப்பெட்டிகள் இருப்பறை, வாக்கு சீட்டுகள் பிரித்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும், இம்மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது திட்ட இயக்குனர் இரா.மணி ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.