/* */

கவுந்தப்பாடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கவுந்தப்பாடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ரெட்டை வாய்க்கால் பகுதி சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலவாணி. இவர்களுக்கு விஷ்ணுபிரியா (25) என்ற மகளும், அருள்சாரதி (22) என்ற மகனும் உள்ளனர்.

அருள்சாரதி வெளிநாட்டில் உள்ள ஐடி கம்பெனியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதமாக சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 21ம் தேதி பயிற்சியை முடித்து விட்டு சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக அருள்சாரதி வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என பெற்றோரிடம் புலம்பி வந்துள்ளார். அவர்கள் மகனுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள்சாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 May 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...