சாலையை தரமாக சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ழைக்காலங்களில் தற்போது போடப்பட்ட சாலை ஆனது கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்
HIGHLIGHTS
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலையை மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை தரமான முறையில் சீரமைக்க வேண்டுமன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இரவு பகலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டுகிறது.
இதன் காரணமாக விபத்துகளை ஏற்படுத்தும் சாலையாக உள்ளது. பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனை தேடி செல்லும் அவல நிலையும் காணப்படுகிறது. இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஜல்லி கற்கள் சிமெண்ட் போன்ற வண்ணத்தில் உள்ள தரமற்ற கிராவல் மண் கொண்டு சாலையிலே பரப்பி சாலை போடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவது மட்டுமின்றி இனி வரும் மழைக்காலங்களில் தற்போது போடப்பட்ட சாலை ஆனது கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் இதுபோன்ற தரமற்ற சாலை அமைக்கும் பணி தரமற்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தலையிட்டு தரமான உப பொருட்களை கொண்டு சாலை அமைக்கும் பணியை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.