நடிகர் சூர்யா- இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்பியிடம் மனு
சூர்யா நடித்து இனிவரும் திரைப்படங்கள் திரையரங்கில் திரையிட விடமாட்டோம் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவித்தனj்
HIGHLIGHTS
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைத்து நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பா.ம.க வினர் புகார் மனு அளித்தனர்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைத்து நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர்கள் ஜோதிமுத்து, வெள்ளை கோபால் தலைமையில் பாமகவினர் புகார் மனு அளித்தனர். இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும், சூர்யா நடித்து இனிவரும் திரைப்படங்கள் திரையரங்கில் திரையிட விடமாட்டோம் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.