பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை -முல்லை விலை உயர்வு
விலை ஏற்றத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
திண்டுக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு ஆத்தூர், செம்பட்டி, ரெட்டியார்சத்திரம், தாடிக்கொம்பு, சாணார்பட்டி, ஏவெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகின்றனர்.
தொடர் பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ 3000 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கும், முல்லைப்பூ 2,600 ரூபாய்க்கும், காக்கரட்டான் 1400 ரூபாய்க்கும் ,சாதிப்பூ 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சம்மங்கி - 130பன்னீர் ரோஸ் - 200 செவ்வந்தி - 80 கோழிக்கொண்டை - 100விரிச்சிப் பூ - 200அரளிப் பூ - 350 செண்டுமல்லி - 80துளசி - 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.விலை ஏற்றத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.