Begin typing your search above and press return to search.
பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமில்லையா? திண்டுக்கல் கலெக்டர் திடீர் ஆய்வு
பொங்கல் தொகுப்பு முறையாகவும் மற்றும் தரமானதாகவும் வழங்கப் படுகிறதா என, திண்டுக்கல் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பச்சரிசி,வெல்லம், மஞ்சள் தூள், உளுந்தம் பருப்பு, கோதுமை, உப்பு நெய், பாசிப்பருப்பு, துணிப்பை ஒன்று, முழுக் கரும்பு என மொத்தம் 21 பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
திண்டுக்கல்லில் உள்ள நியாய விலைக்கடைகளில், மாவட்ட ஆட்சியர் விசாகன், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்றும், அவை அனைத்தும் பொதுமக்களிடம் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தரமில்லாத பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி சென்றார்.