அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது 2 லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி பறிமுதல்
- எஸ்பி தனிப் படையினர் அதிரடி
HIGHLIGHTS
திண்டுக்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது 2 லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி பறிமுதல் - எஸ்பி தனிப் படையினர் அதிரடி
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளிப்பாடி, செல்லமந்தாடி ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மண் அள்ளுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி எஸ்.பி. தனிப்படை சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் அரசு அனுமதியின்றி மண் அள்ளிய அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜ், நாகராஜ், கிருஷ்ணன், திருப்பதி, முருகன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2லாரி, 2 டிப்பர், 1 ஜேசிபி மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தாலுகா காவல் சார்பு ஆய்வாளர்கள் விஜய், முனியாண்டி மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.