தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் மாணவர்கள் வருகை
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் 334 பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1600 அரசு பள்ளிகளில் 8248 ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கொரோனோ தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தர்மபுரி மாவட்டத்தில் 334 பள்ளிகள் திறக்கப்பட்டு இன்று 9 வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நடைபெறுகிறது. பள்ளி வகுப்பறையில் பாதியளவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக அரசின் வழி முறைகளை பின்பற்றி முகவசம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர் .பள்ளிக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, வரிசையாக வகுப்பறைக்குள் அனுப்பினர். முன்னதாக மாணவர்கள் காலை முதலே ஆர்வத்துடன் பள்ளிக்கு வர தொடங்கினார்கள். இதேபோன்று ஆசிரியர்களும் உற்சாகத்துடன் மாணவர்களை வரவேற்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வகுப்பறைக்கு 20 மாணவர்கள் வீதம் ஒவ்வொரு வகுப்பறையிலும் வகுப்புகள் நடைபெற்றன.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி , அரூர், பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்திருந்தனர்.