/* */

தருமபுரியில் செல்லியம்மன் கோவில் விழாவையொட்டி மினி ஜல்லிக்கட்டு போட்டி

தருமபுரியில் செல்லியம்மன் கோவில் விழாவையொட்டி மினி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

HIGHLIGHTS

தருமபுரியில் செல்லியம்மன் கோவில் விழாவையொட்டி மினி ஜல்லிக்கட்டு போட்டி
X

சீறிப்பாய்ந்து வந்த காளையை ஒரு வீரர் அடக்கும் காட்சி.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டடான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் பரவி சேலம், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரி அடுத்த சோகத்தூர் செல்லியம்மன் பண்டிகை முன்னிட்டு சோகத்தூர் கோவில் மைதானத்தில் 2-வது மினி ஜல்லிக்கட்டு போட்டி 3-வது முறையாக இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 300 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இன்று காலை , ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழியுடன், போட்டியை தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் வாடி வாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசல் வழியாக துள்ளி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயற்சி செய்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளி, சில்வர், பணம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகளையும் விழாக்குழுவினர் வழங்கி வருகின்றனர். முதல் சுற்றில் 50 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

தொடர்ந்து இந்த ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் 2 மருத்துவ குழுக்களும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 150 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் இந்தாண்டின் 3-வது ஜல்லிக்கட்டுப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  5. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  7. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  8. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  9. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!