Begin typing your search above and press return to search.
தர்மபுரியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது
தர்மபுரியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சோதனை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில், தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் நடத்திய சோதனையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த குப்பாகவுண்டர் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம், சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான தமிழ் செல்வத்தை தேடி வருகின்றனர்.