Begin typing your search above and press return to search.
தருமபுரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் குப்பைகள்
தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் சோகத்தூர் அருகே பல நாட்களாக குப்பைகள் தேங்கியுள்ளது.
HIGHLIGHTS
தருமபுரி அருகே உள்ள சோகத்தூர் கூட்ரோடு அருகாமையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர்கள் மதுபானம் வாங்க செல்வார்கள். அப்படி செல்பவர்கள் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் பாட்டில்களை அங்கிருக்கும் சாலை ஓரம் உள்ள குப்பைத்தொட்டி அருகே வீசி செல்கின்றனர்.
ஆனால் குப்பைகள் எடுக்காமல் அங்கே தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்பவர்களுக்கு துர்நாற்றம் வீசும் அளவிற்கு குப்பைகள் தேங்கியுள்ளது. நோய் பரவுவதற்கு முன்பாக நகராட்சி ஊழியர்கள் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.