/* */

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கூலித்தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு

தர்மபுரி மாவட்டத்தில், கூட்டுக் குடும்பமாக வசிக்கும் கூலித் தொழிலாளர்கள், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கூலித்தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
X

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு, குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மக்கள்.

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

பென்னாகரம் போடுர்ரோடு பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களான நாங்கள் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக கூட்டுக்குடும்பமாக வசிப்பதால் வீடுகளில் போதிய இடம் இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். எனவே எங்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொது கழிப்பிட வசதி

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், அரூர், கச்சேரி மேடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்கள். இதேபோல் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற, தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லாததால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கட்சி கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்த பகுதி அருகே கட்டண கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி, அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்