/* */

சுதந்திர தின விழாவுக்கு பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் - தர்மபுரி கலெக்டர்

தர்மபுரி யில் சுதந்திர தின விழாவுக்கு பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் என கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள்

HIGHLIGHTS

சுதந்திர தின விழாவுக்கு பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் - தர்மபுரி கலெக்டர்
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்; நாளை (15.08.2021) 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, கொரோனா நோய் தடுப்பு மற்றும் இதர பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நேரில் வருகை தர வேண்டாம் எனவும், இச்சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை உள்ளுர் தொலைக்காட்சிகளில் பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து கண்டு களித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 Aug 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த