தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
உலக தொழிற்சங்க சம்மேளன அமைப்பு தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சி.நாகராஜன், மாநில குழு உறுப்பினர்கள் கலாவதி,ஜி. நாகராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.
தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதை உறுதி படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. வேலைவாய்ப்புகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.