/* */

தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
X

 தர்மபுரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக தொழிற்சங்க சம்மேளன அமைப்பு தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சி.நாகராஜன், மாநில குழு உறுப்பினர்கள் கலாவதி,ஜி. நாகராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.

தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதை உறுதி படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. வேலைவாய்ப்புகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Updated On: 4 Oct 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்