Begin typing your search above and press return to search.
தருமபுரி: எஸ்எஸ்ஐ மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலி
தருமபுரி அருகே, காவல் எஸ்எஸ்ஐ மோட்டார் சைக்கிள் மோதியதில் மூதாட்டி பலியானார்.
HIGHLIGHTS
தர்மபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 67). இவர், கடந்த 22-ந் தேதி அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், மோட்டார் சைக்கிளில் வந்தார்.
திடீரென எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், முனியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த முனியம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.