கடலூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.95.66 கோடி கடனுதவி
கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 95 கோடியே 66 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர்கள் வழங்கினர்.
HIGHLIGHTS
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அதேபோல கடலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு காசோலையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இதில் 25 ஊராட்சிகளில் 1180 சுய உதவி குழுக்களுக்கு ரூ. 95.66 கோடி வங்கி கடனுக்கான காசோலைகளை உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், சபா ராஜேந்திரன்,கோ. ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.