உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் 108 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மொத்த மனுக்கள் 19,116 அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்து தற்போது 8953 மனுக்களுக்கு உரிய தீர்வுகள் காணப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இன்று 108 பயனாளிகளுக்கு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில், மாற்றுத்திறனானிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், மீனவர் நலத்துறை, வேளாண் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை என பல்வேறு துறை சார்பில், விதவை பெண்களுக் கான ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோருக்கான ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரம், புதிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான காதொளிக்கருவி, மூன்று சக்கர சைக்கிள், இலவச சலவைப்பெட்டி என ரூ.49,50,775/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.