சொத்துக்காக தாய்-மகள் வெட்டிக்கொலை
கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடியில் சொத்துக்காக தாய், மகளை உறவினரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி பஞ்சாயத்துக்குட்பட்ட உடையார்பாளையத்தில் வசந்தா என்கிற விஜயலட்சுமி மற்றும் அவரது மகளை சொத்துக்காக உறவினரே வெட்டிப்படுகொலை செய்தார். இது குறித்து தகவலறிந்து வந்த ரெட்டிச்சாவடி போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
வசந்தா, சிதம்பரம் தம்பதிக்கு இரண்டு மகள்கள். ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வசந்தாவின் கணவர் சிதம்பரம் காலமானார். இதனைத்தொடர்ந்து வசந்தா தன்னுடைய இரண்டாவது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு அதிக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது இந்த சொத்துக்களை அபகரிக்க அவரது உறவினர் வெட்டி படுகொலை செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.