/* */

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விலங்குகள் மீட்பு

பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வந்த நபர், சென்னை விமானநிலைய சுங்கத்துறையினரின் சோதனையில் பிடிபட்டார்.

HIGHLIGHTS

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விலங்குகள் மீட்பு
X



பாங்காக்கிலிருந்து வன விலங்குகள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 15 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து வந்த விமானப் பயணியிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் வெள்ளை முள்ளம்பன்றி, டாமரின் வகை குரங்கு ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதேபோல கடந்த 16 ஆம் தேதி பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாஹிப் தம்பியை சந்தேகத்தின் அடிப்படையில் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 9 வெள்ளை எலிகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், பாங்காக் விமான நிலையத்தின் வெளியில் அடையாளம் தெரியாத நபர் இந்த பார்சலை கொடுத்து, இதை சென்னை விமான நிலையத்தின் வெளியில் ஒருவர் பெற்றுக் கொள்ள இருந்ததாகவும் தெரிவித்தனர். இருவரிடமிருந்தும் விலங்குகளை பறிமுதல் செய்த சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்பினர்.



Updated On: 18 May 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை