செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு தொழிற்பேட்டை மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தேசியகொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 189 பேருக்கு ரூ.3லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சாலை விபத்தில் உயிரிழதோருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணமும், 5 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீட்டிற்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
மேலும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மூன்று பேருக்கு ரூ. 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தையல் எந்திரம் வேளாண்மை இடுபொருட்கள், விசைத்தெளிப்பான், மின்மோட்டார், டிராக்டர் என மொத்தம் 313 பயனாளிகளுக்கு மொத்தம் 58 லட்சத்து 77 ஆயிரத்து, 9000 ரூபாய் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.