Begin typing your search above and press return to search.
கொரொனா பேரிடர்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மின்துறை அதகாரிகள் உதவிக்கரம்!
கொரொனா பேரிடர் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மின் துறை அதிகாரிகள்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரொனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், துப்புரவுபணியாளர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்லமுடியாமல் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு சுமார் 160 வாட்டர் பாட்டில்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கிருமிநாசினிகள் உள்ளிட்டவற்றை செங்கல்பட்டு தமிழ்நாடு மின்சாரத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகாரிகள் சார்பில் வழங்கப்பட்டது.