/* */

காற்றழுத்த தாழ்வுமண்டலம்: செங்கல்பட்டு மாவட்ட நிலவரம் எப்படி?

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

காற்றழுத்த தாழ்வுமண்டலம்: செங்கல்பட்டு மாவட்ட நிலவரம் எப்படி?
X

கோப்பு படம்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மாமல்லபுரம் , ஸ்ரீஹரிகோட்டா இடையே, இன்று மாலை கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரை பகுதியை இன்று காலை 11 மணி அளவில் நெருங்கும்.

அதைத் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும், ஸ்ரீ,ஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில், மாமல்லபுரம் அருகே, இன்று மாலை கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. .

இதன் தாக்கத்தால் 11-ம் தேதி (இன்று) செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடற்கரை அருகே பொதுமக்கள் செல்லவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறத். முன்னெச்சரிக்கையாக, இன்று அதிகாலை முதலே பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Nov 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  3. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  4. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  6. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  8. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  9. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  10. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...