/* */

வியாபாரிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை

கொரொனா விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

வியாபாரிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை
X

செங்கல்பட்டில் சாலையோர கடைகள் அனைத்தும் இன்று வழக்கம் போல திறந்து இருந்தன

கொரொனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

சாலையோரத்தில் காய்கறி மற்றும் பல பூக்கடைகள் பழக்கடைகளை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என ஏற்கனவே வியாபாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இன்று காலை செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் காய்கறி கடைகள்,பழக்கடைகள், பூக்கடைகள்,என சாலையோர கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறந்து இருந்தன.

இதனை பார்த்த செங்கல்பட்டு காவல் துறையினர் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை எடுத்துச்சொல்லி அவர்களை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல தேநீர் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனை பயன்படுத்தி ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் தற்போது டீ, சிகிரெட், விற்பனை செய்து வருகின்றனர். அவர்களையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Updated On: 15 May 2021 3:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’