செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்
செங்கல்பட்டு ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் சார்பில் முழு ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவு விநியோகம்
HIGHLIGHTS
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வ அமைப்பினர் பலர் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு ஜி.ஆர்.டி.ஜுவல்லர்ஸ் சார்பாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நாள் துவங்கி தினமும் அந்த பகுதிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
ஜி,எஸ்,டி. சாலை அருகே உள்ள வேதாச்சலம் பிரதான சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் முன்பாக, சமூக விலகலை கடைபிடித்து, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு புளி சாதம், சாம்பார் சாதம், லெமன் சாதம் என தினமும் சுமார் 150 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.