செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு
செங்கல்பட்டில் ஊரடங்கு விதிமீறல் 20 பேர் மீது வழக்கு
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துவருகிறது. கொரொனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவதை தடுக்க மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித் திரிந்ததாக செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை முதல் 20 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகன ஓட்டிகளிடம் எச்சரித்து அனுப்பினர்.
#instanews #tamilnadu #20people #charged #with curfew # Chengalpattu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #செங்கல்பட்டில் #ஊரடங்கு #விதிமீறல் #20பேர்மீது #வழக்கு