Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று கிடுகிடு உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 53 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பலர் பாதிக்கப்பட்டு இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 904 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 55 குணமடைந்த நிலையில் இதுவரை 52 ஆயிரத்து 628 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.