/* */

செங்கல்பட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்

செங்கல்பட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

செங்கல்பட்டில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வாகன ஓட்டிகளுக்காக நடந்த முகாமிற்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயா, ஆனந்தன், கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தார். சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்ற இம்முகாமில் வாகன ஓட்டிகளுக்கு கண் குறைபாடு தொடர்பாக பரிசோதனை, பொது மருத்துவ சோதனைகளை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 Jan 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?