அரியலூரில் மாவட்ட கலெக்டர் தலைமையில் உலகமக்கள் தொகை தின உறுதிமொழி
அரியலூர் மாவட்டத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தினம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் கொண்டாடப்பட்டது.
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட்டு, உலக தொகை தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும், உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மரக்கன்றுடன், மஞ்சப்பைகள் வழங்கி, உலக மக்கள் தொகை விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அன்னை தெரசா செவிலியர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். மேலும், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குடும்ப நல துணை இயக்குநர் மரு.குருநாதன்கந்தையா, மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் மரு.சுதாகர், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மரு.இளவரன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன் மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.