Begin typing your search above and press return to search.
ஊராட்சி தலைவர் தேர்தல் நடத்தக்கோரி கிராம பொதுமக்கள் போராட்டம்
ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் அடுத்த ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவராக இருந்த ராஜேஸ்வரி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தற்போது வரை இடைத்தேர்தல் நடத்தாததால் ஊராட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுடன் ரெட்டிபாளையம் ஊராட்சி தலைவருக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்த நிலையில், இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு வராததால் ஊராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஊராட்சியின் வளர்ச்சிக்கு தலைவர் முக்கியம் என்பதை உணர்ந்து தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.