கிராமங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
அரியலூ்ர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமா நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாணதிரையான்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் .ரத்ன பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர், மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கம் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தகுதியான அனைவருக்கும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அரசு தெரிவித்துள்ளபடி முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி சோப்புபோட்டு கைக்கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தகுதியான நபர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள், அரசு ஆரம்ப சுகாதாரத்தின் மூலமாகவோ மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
#இன்ஸ்டா செய்தி #தமிழ்நாடு #அரியலூர் #விளாங்குடி #கலெக்டர் #கொரோனா #தடுப்பூசி #கிராமங்க்ள் #முகாம் #விழிப்புணர்வு #முகக்கவசம் #சமூகஇடைவெளி #vilage #besafe #covid19 #covidcase #famouse #bus #coronavirus #covidcamp #coronatest #stayhome #staysafe #instanews #tamilnadu #ariyalur