செந்துறை அருகே பொதுசுகாதார கழிப்பிட வசதி வேண்டி பொதுமக்கள் சாலைமறியல்
செந்துறை அருகே குழுமூர் கிராமத்தில் பொதுசுகாதார கழிப்பிட வசதி கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகாவில் உள்ள குழுமூர் கிராமத்தில் பொது சுகாதார வளாகம் கழிப்பிட வசதிகள் இன்றி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதாகக் கூறி திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் செந்துறையில் இருந்து திட்டக்குடி செல்லும் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து வந்த ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுவதாகவும் இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு செந்துறை காவல்துறை ஆய்வாளர் அன்பழகன்,கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தான் ஆகியோர் தொடர்ந்து நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வாரகாலத்திற்குள் பொது சுகாதார மற்றும் கழிப்பிட வளாகம் சம்பந்தமான நடவடிக்கை சரிசெய்யப்படும் என்ற தீர்வு எட்டப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்தனர். இந்த சாலைமறியல் நிகழ்வால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.