Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தவர் கைது
அரியலூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பான பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோக்குடி மேலத்தெரு சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் ஜான் ஜஸ்டின் (28).
கல்லகம் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமாக சாக்குப் பையுடன் நின்றுகொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த ரோந்து அலுவலர்கள் தலைமை காவலர்
முருகேசன் மற்றும் ஊர்க்காவல் படை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் ஜான் ஜஸ்டினை பிடித்து விசாரித்தபோது, அவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து ஜான் ஜஸ்டின் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.அவர் வைத்திருந்த 48 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.