Begin typing your search above and press return to search.
அரியலூரில் நான்கு திரையரங்குகள் மூடப்பட்டன
அரியலூரில் மாவட்டத்தில் 4 திரையரங்குகள் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு மூடப்பட்டன.
HIGHLIGHTS
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு இன்று முதல் வணிக வளாகங்கள் திரையரங்குகள் மூட உத்தரவிட்டிருந்தது.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் உள்ள நான்கு திரையரங்குகள் மூடப்பட்டன.
ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் திரையரங்கிற்கு வருவது குறைந்த சூழ்நிலையில் கடந்த ஓராண்டாக நஷ்டத்தில் இயங்கி வந்த திரையரங்குகள் தற்போது மூடப்பட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத சூழ்நிலை நிலவுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.