/* */

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம்கொண்டு இடித்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
X

ஜெயங்கொண்டம் அருகே ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு பாண்டியன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 22 குடும்பங்களை சேர்ந்தோர் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் அறிவித்த உத்தரவின் படி மேற்கண்ட வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அப்போது, இங்கு வசிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கான்கிரீட் வீடுகள், குடும்ப அட்டைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை இடிக்க கூடாது என அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இடிக்கப்படும் வீடுகளில் வசிப்போருக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும். இடிக்கப்படும் வீடுகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையடுத்து ஏரிக்கரை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டன.

Updated On: 21 April 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்