ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நேற்று ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ் கான் அப்துல்லா மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளக்கப்படங்கள் மூலம் ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றங்களின் வகைகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பண இழப்புகள் குறித்தும், எவ்வாறு முன்னெச்சரிக்கையாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சைபர் குற்றங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற NCRP இணையத்தில் எவ்வாறு புகார் அளிப்பது, பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 155260 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊர்க்காவல் படையினர் தங்களை அணுகும் மக்களுக்கு இது குறித்த தகவலை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் எடுத்துக்கூறப்பட்டது.
நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி. திருமேனி, சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.