அரியலூர் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,603. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,12,664.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று, கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துமனைகளில் 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 16,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,398 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 256 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,603. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,12,664. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,585 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,852 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 38,638 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 105 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 320 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 230 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 90 பேர் போட்டுக்கொண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.