Begin typing your search above and press return to search.
கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல் இயக்குனர் (தொழில்நுட்ப சேவை) அமரேஷ் பூஜாரி இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
அரியலூர் மாவட்ட சோதனைச் சாவடிகள் மற்றும் சோதனை மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட காவல் துறையின் கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.
பின்னர் அரியலூர் மாவட்ட காவல் துறையின் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரடங்கு செயல்பாட்டு முறை, ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. பாஸ்கரன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு,கொரோனா பரவலை தடுக்க மேலும் பல அறிவுரைகளை வழங்கினார். அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தார்கள்.