அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 100 க்கு கீழே குறைந்துள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 12 பேர். மருத்துமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றுவரை 16,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,337 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 627 பேர். இதுவரை 3,09,329 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,688 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,92,641 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,461. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,06,166. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 39,924 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,847 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 37,982 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 105 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 5702 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 4504 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 1198 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.