Begin typing your search above and press return to search.
அரியலூர்: கார் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு- 2 பேர் காயம்
அரியலூர் மாவட்டத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மின்நகரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மெக்கானிக் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். இந்நிலையில் சர்வீஸ்க்கு வந்த காரை அவரது மகன் ஹரி எடுத்து கொண்டு நண்பர்களான ஹரிகரன், யோகேஷ் ஆகியோருடன் காரை ஒட்டியுள்ளார்.
அரியலூர் புறவழிச்சாலையில் அல்லிநகரம் அருகே காரை வேகமாக ஓட்டி சென்ற போது, திடீரென கார் ஹரியின் கட்டுப்பாட்டை மீறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் காரை ஓட்டிய ஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் இருவரும் காயமடைந்த நிலையில், அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக குன்னம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.