Begin typing your search above and press return to search.
பஸ் படிக்கட்டு பயண ஆபத்து குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் பெரியசாமி மற்றும் அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், மாணவ மாணவிகளுக்கு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஏறாமல் வரிசையாக ஏற வேண்டும் என்றும், மேலும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.