மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரியலூரில் எம்எல்ஏ துவக்கினார்
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்எல்ஏ சின்னப்பா தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிர தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையின் மூலம் 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமைதாங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு, இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவிரும்பும் பயனாளிகள் அனைவரும் தங்களது நிறுவனம் அல்லது அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் சென்று கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) வீ.சி.ஹேமசந்த்காந்தி, உதவித்திட்ட மேலாளர் சதீஸ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.