அரியலூர் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 6 பேர். மருத்துமனைகளில் 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 6 பேர். மருத்துமனைகளில் 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று வரை 16,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,412 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 354 பேர். இதுவரை 3,14,238 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,738 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,97,500 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,640. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,14,474. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,784 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,854 பேர். நோய்த்தொற்று இல்லாதவர்கள் 38,839 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 101 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 300 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 169 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 131 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.