அரியலூர்: இன்று 88 பேருக்கு கொரோனா
கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று 88 பேருக்கு கொரோனா -06 ம்தேதி கொரோனா நிலவரம்
அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துமனைகளில் 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 67பேர். இன்றுவரை 5983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 5501 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 53பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1080 பேர். இதுவரை 1,69111 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 5983பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,63,128பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 8267, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,18,019 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 22,958பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 807பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 21905பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 246பேர்.
கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1093பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 813பேரும், இரண்டாவது தடுப்பூசியை 280பேரும் போட்டுக்கொண்டுள்ளனர்.
முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!