தனியார் உர விற்பனை நிலையங்களை அரியலூர் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமும், அங்கீகார உரிமம் பெற்ற தனியார் உரவிற்பனை கடைகள் மூலமும் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் தா.பழுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சுத்தமல்லி தனியார் உரவிற்பனை ஆலோசனை மற்றும் இடுபொருள் விற்பனை நிலையம், நடுவலூர் சாலையில் உள்ள தனி;யார் உரம்விதை பூச்சி மருந்து கடை ஆகிய தனியார் நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், தனியார் உரவிற்பனை நிலையங்களில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு, உரங்களின் விலை, உரங்கள் இருப்புப் பதிவேடு, விற்பனைப் பதிவேடு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை ரசீது, உரங்களின் சரியான எடை அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தும், பதிவேடுகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.