/* */

பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

நெல்கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்
X

அரியலூர் - நெல் கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாய சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஆன்லைன் பதிவு செய்ய சொல்லி அலையவிடாமல் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் விவசாயிகளிடம் இருந்து பெற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இருந்து மூட்டைக்கு 40 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதை கண்டித்து அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20 க்கும் மேற்பட்ட விவசாயிகளை திருமானூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 3 March 2022 7:51 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...