அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் 23-ந்தேதி சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் பொருட்கள் வாங்குவதற்கான சிறப்பு முகாம் அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளில் 23-ம்தேதி நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நியாய விலைக் கடைக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களில் மிக வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க இயலாத நிலையில் இருப்பின், அவர்கள் தங்களுக்கு நம்பகமான ஒருவரை நியாய விலைக் கடைக்கு அனுப்பி தங்களுக்கான பொருட்களை பெற்றுச் செல்ல அங்கீகாரம் செய்யலாம். அதற்கானப் படிவம் நியாய விலைக்கடையில் உள்ளது. அதனை பெற்று பூர்த்தி செய்து நியாய விலைக்கடை விற்பனையாளரிடம் கொடுத்து, பின் பொருட்களை பெற்று பயனடையலாம் எனவும் பூர்த்தி செய்த படிவங்கள் நியாய விலைக் கடைகளில் பெறுவதற்கான சிறப்பு முகாம் எதிர்வரும் 23.03.2022 அன்று அனைத்து கடைகளிலும் நடைபெற உள்ளது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்கள் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக் குறைகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட குறைதீர் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலரது தொலைபேசி எண் 04329- 228321 ஐ தொடர்பு கொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.